உலகின் முதல் பெராரி தீம் பார்க் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : துபாய் நாட்டில் முதல்முறையாக பார்முலா ஒன் கார் போட்டிகள் நடைபெற்றன. அப்போது. அந்த போட்டிகளுக்கு, உலக மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததாகவும், அதனை கவுரவப்படுத்தும் பொருட்டு, பெராரி உலகம் துபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெராரி உலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெராரி தீம் பார்க், சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. இந்த தீம் பார்க 100 நாட்கள் திறந்திருக்கும் என்றும், இந்த தீம் பார்க்கில், உலகின் அதிவேக ரோலர் கோஸடர் நிறுவப்பட்டு உள்ளதாகவும், பெராரி பார்முலா ஒன் காரில் பயணம் செய்த உணர்வு, இந்த ரோலர் கோஸ்டரில் பயணிக்கும்போது ஏற்படும் என்றும் துபாயின் முக்கிய சுற்றுலாத் தலமான யாஸ் மரினா சர்க்யூட்டில், கடந்த நவம்பர் 2009 காலம் வரை பார்வையிட்ட மக்களின் எண்ணிக்கையை, இந்த தீம்பார்க் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை மிஞ்சி விட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, July 21, 2010
Tuesday, July 20, 2010
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 77 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் செப்டம்பர் டெலிவரிக்கான விலை 5 சென்டுகள் அதிகரித்து 77.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9 சென்டுகள் அதிகரித்து 76.31 அமெரிக்க டாலராக இருந்தது.
சச்சினின் 'ரத்த சரித்திரம்'
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. 'டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்
பதிவும் முடிந்து விட்டது. ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக கருதப்படும் ஏழை ரசிகர்களால் இப்புத்தகத்தை வாங்க முடியாது. இருப்பினும் 1 லட்சம் மற்றம் 1.50 லட்சம் ரூபாய்களிலும் இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சச்சினின் ரத்தம் இடம் பெறாது. கையெழுத்து மட்டுமே இடம் பெறும். இது தவிர, 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்களிலும் இப்புத்தகத்தை வெளியிட கிரஹான் மீடியா ஏற்பாடு செய்து வருகிறது. அவரது டி.என்.ஏ., பற்றி தகவல்களும் இதில் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டு உள்ளது. புதுமை: இது குறித்து கிரஹான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,'' கிரிக்கெட் அரங்கின் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார் சச்சின். இதனால் 'டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் புதுமை செய்ய நினைத்தோம். அவரது ரத்தம் தோய்ந்த பக்கம் இடம் பெறுவதால், இப்புத்தகம் தனிச்சிறப்பை பெறுகிறது. உலககோப்பை தொடரை ஒட்டி இப்புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள் ளோம்,'' என்றார்.
இதற்கு முன்... : கிரிக்கெட் கடவுள் சச்சினின் சுயசரிதை புத்தகம் 37 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் இதற்கு முன் மைக்கேல் ஏஞ்சலோ என்ற புத்தகம் 49 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது. கலைத்திறனை வெளிப்படுத்தும் இப்புத்தகம் கைகளினால் தயாரிக்கப்பட்டது. 30 கிலோ எடை கொண்டது. மொத்தம் 33 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட இப்புத்தகம் மார்பிள் மற்றும் வெல்வெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகத்தில் இது இடம் பெற்றுள்ளது. இதனை குரூப்போ எப்.எம்.ஆர்., நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
Monday, July 19, 2010
தங்கம் விலை உயர்வு
தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1709 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.18380 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.31.55 க்கும், பார் வெள்ளி ரூ.29510 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பங்குச்சந்தை நிலவரம்
மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது சரிவுடனேயே முடிந்தது. காலை 9.17 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.17 புள்ளிகள் குறைந்து 17913.65 ஆக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.75 புள்ளிகள் குறைந்து 5379.15 ஆக வர்த்தகமாகியிருந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.40 புள்ளிகள் குறைந்து 17928.42 ஆக வர்த்தகமாகியிருந்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 7.45 புள்ளிகள் குறைந்து 5386.45 ஆக வர்த்தகமாகியிருந்தது.
Saturday, July 17, 2010
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு
பெட்ரோல், டீசல் விலையை முன்பு மத்திய பெட்ரோலிய அமைச்சகமே நிர்ணயம் செய்து வந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்ளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு கடந்த மாதம் மிக அதிக அளவுக்கு சென்றது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை, இது தொடர்பாக கூடி விவாதித்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மாறுவதற்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த விலை மாற்றத்தை எத்தகைய கால இடைவெளியில் செய்வது என்பதில் இந்திய எண்ணை நிறுவனங்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கலாம் என்று யோசனை கூறின. இதை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கவில்லை. இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை விலை நிர்ணயம் செய்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா எண்ணை நிறுவன பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தினார். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதன்படி மாதத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் படி வரும் 25 அல்லது 26-ந் தேதி பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணை விலை சற்று குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையை அதற்கு ஏற்ப சற்று குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில் பெட்ரோல் விலை விரைவில் லிட்டருக்கு 20 பைசா குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத்பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மூன்றும் இந்த விலை குறைப்பை ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தும். தனியார் எண்ணை நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களும் அரசு எண்ணை நிறுவனங்களை பின்பற்றி விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த நான்கு ஆண்டுகளில் (2014ம் ஆண்டுக்குள்) நம் நாட்டில் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 99.30 கோடியாக உயரும் என ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது. நடப்பு 2010ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 66 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருப்பர் என்றும் அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. செல்போன்கள் பயன்பாடு அதிகரிப்பதில், உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக உள்ளது. நடப்பாண்டு மே மாத நிலவரப்படி, நாட்டில் உள்ள செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 62 கோடியாகும். இது, சென்ற ஆண்டு இறுதியில் 52.50 கோடியாக இருந்தது. அதாவது, ஆண்டுக்கு 10 கோடி என்ற அளவில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த நான்கு ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனை அளவை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.நடப்பு நிதி ஆண்டில் இந்திய தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.4,000 கோடி முதலீடு மேற்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 கோடி செல்போன் இணைப்புகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
Subscribe to:
Comments (Atom)