இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
காலை 9.04 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.40 புள்ளிகள் குறைந்து 17942.97 ஆக வர்த்தகமாகியிருந்தது .
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.00 புள்ளிகள் குறைந்து 5392.55 ஆக வர்த்தகமாகியிருந்தது.
Thursday, July 29, 2010
நிதிச்சுமையில் சிக்கி தவிக்கும் 'தங்கரத' ரயில்
தென்னிந்திய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கரத சொகுசு ரயில் நிதிச்சுமையில் சிக்கியுள்ளதால், தொடர்ந்து இயக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தென்னிந்திய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், 2007ம் ஆண்டு தங்கரத சொகுசு ரயில் (கோல்டன் சேரியாட்) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலில் ஆடம்பர வசதிகளுடன் கூடிய 11 பெட்டிகள் இணைக்கப்பட்டன. இவற்றில் 44 தனித்தனி அறைகள் உள்ளன. இதில் 82 பயணிகள் பயணம் செய்யலாம். இதில் பயணம் செய்ய ஒரு நாள் கட்டணமாக லட்சத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக தங்கரத ரயில் திட்ட இயக்குனர் சீனிவாஸ் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தங்கரத ரயிலில் பயணம் செய்ய கட்டணம் அதிகமென்பதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. மேலும் உலக பொருளாதார சரிவு எதிரொலியால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த ரயில் ஏற்கனவே இரண்டு முறை மட்டுமே முழு கொள்ளவுடன் பயணம் செய்துள்ளது. ஏற்கனவே தங்கரத ரயில் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ரயிலை ஒரு தடவை இயக்குவதற்கு 18.5 லட்ச ரூபாயை ரயில்வே துறை கட்டணமாக வசூலித்து வந்தது. இந்நிலையில் கட்டணத்தை ரயில்வே துறை திடீரென 40 லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டது. ஏற்கனவே போதிய வருவாய் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில் ரயில்வே துறை கட்டணத்தை உயர்த்தியுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தங்கரத ரயிலை தொடர்ந்து இயக்கும் வகையில் ரயில்வே துறை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள், முதலமைச்சர் மற்றும் மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்குமென நம்புகிறோம். மேலும் கட்டணத்தை குறைக்கவும், பயண கட்டணத்தை நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். 2009ம் ஆண்டில் உலக பொருளாதார சரிவு மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற காரணங்களால் தங்கரத ரயில் பெரும் நஷ்டத்தை எதிர் கொண்டது. மேலும் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தியதும், இத்திட்டத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இவ்வாறு சீனிவாஸ் கூறினார்.
சரிவில் தங்கம்
தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்தது.
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1662 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.17870 ஆகவும் இருந்தது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.31.00 க்கும், பார் வெள்ளி ரூ.28945 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
"ரெயின்ட்ரீ" ரூ.200 கோடியில் புதிய ஹோட்டல்
சென்னையைச் சேர்ந்த சீப்ராஸ் குழுமம், ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் துறையில் ஈடுபட்டு வருகிறது. 1970-ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், அண்ணாசாலையில், நந்தனத்தில் ரெயின்ட்ரீ என்ற அதன் இரண்டாவது ஹோட்டலை தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் முதல் ரெயின்ட்ரீ ஹோட்டல் சென்னை செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ளது. இது குறித்து இக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சி.சுப்பாரெட்டி கூறும்போது, 'புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரெயின்ட்ரீ ஹோட்டல் ரூ.200 கோடி செலவில் (நிலம் வாங்கியது உள்பட) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் 230 அறைகள் உள்ளன. இது தவிர, சென்னை விமான நிலையத்திற்கு அருகாமையில், ரூ.200 கோடி திட்டச் செலவில், 200 அறைகளுடன் கூடிய மற்றொரு ஹோட்டலையும் உருவாக்கி வருகிறது. இந்த ஹோட்டல் திட்டத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கி உள்ளன. டெல்லியில் உள்ள பாதுகாப்பு இயக்குனரகத்தின் ஒப்புதல் நிலுவையில் உள்ளது'' என்று தெரிவித்தார். சீபிராஸ் குழுமம், கடந்த 27 ஆண்டுகளில், 170 ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், 4.50 லட்சம் சதுர அடியில் திட்டப் பணிகள் கைவசம் உள்ளன. டைடல் பார்க் அருகாமையில் 3.50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் 350 குடியிருப்புகள் திட்டம் ஓராண்டிற்குள் நிறைவடையும் என இக்குழுமம் தெரிவித்துள்ளது. இக்குழுமத்திற்கு சென்னை ஒரகடத்தில் 60 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ஒரு நகரியத்தையும், வில்லா வகை குடியிருப்புகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், 40 ஏக்கரில் வர்த்த குடியிருப்பு திட்டம் ஒன்றையும் மேற்கொள்ள இருப்பதாக சுப்பாரெட்டி தெரிவித்தார். இக்குழுமத்தில் தற்போது 2,900 பேர் பணிபுரிகின்றனர். ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளின் வாயிலாக நடப்பு நிதி ஆண்டில், குழுமம் ரூ.350 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இது, சென்ற நிதி ஆண்டில், ரூ.250 கோடியாக இருந்தது. செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் 105 அறைகள் உள்ளன. தற்பொழுது இவற்றில் 70 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் தங்கி வருகின்றனர். இந்த ஹோட்டல், சென்ற நிதி ஆண்டில் ரூ.35 கோடி வருவாய் ஈட்டி உள்ளது என அவர் மேலும் கூறினார்.
இன்டெல் சர்வர் கூலர் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான கிளாசியல்டெக் நிறுவனம், இன்டெல் சீரிஸ் சர்வர் கூலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், 3 வகை சர்வர் கூலர்களை அறிமுகம் செய்துள்ளது எனவும், அவை முறையே, போலாரிஸ் 7010 ( 1யு ரேக்மவுண்ட் பேசிவ்), போலாரிஸ் 7110 (1யு ரேக்மவுண்ட் ஆக்டிவ்) மற்றும் போலாரிஸ் 7120 ( 2யு ரேக்மவுண்ட் ஆக்டிவ்), இந்த சர்வர் கூலர்கள் இன்டெல் எல்ஜிஏ771 சர்வர் சிபியூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சர்வர் கூலர்கள் சிஎப்டி மற்றும் ஸ்கைவ்ட் பின் அல்லது ஸ்டாக்ட் பின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், போலாரிஸ் 7010, 680 கிராம் எடையுடனும், போலாரிஸ் 7120 746 கிராம் எடையுடனும், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாக கிளாசியல்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குற்றாலத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி
குற்றாலத்தில் மாவட்ட மகளிர் திட்ட சுய உதவி குழுக்களின் கைவினை பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் ஜெயராமன் திறந்து வைத்தார். குற்றாலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் துவக்கி வைத்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களை பார்வையிட்டார். மகளிர் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் முத்துமீனாள் முன்னிலை வகித்தார். முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் குற்றாலம் டவுன் பஞ்., தலைவர் ரேவதி, துணைத் தலைவர் ராமையா, நிர்வாக அதிகாரி ராஜையா, ஆர்டிஓ சேதுராமன், தாசில்தார் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்.,) ஆமீனாள் பீவி, செங்கோட்டை வார்டு உறுப்பினர் சுசீலா, உதவி திட்ட அலுவலர் ஆண்டனி எட்வர்ட்சிங் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கிடும் வகையில் ஆயத்த ஆடைகள், அலங்கார பொருட்கள், மூலிகை பொருட்கள், பத்தமடை பாய் வகைகள், ஊஞ்சல்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள், மூங்கில் நாற்காலிகள் போன்ற பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
வீடு,வாகன கடன் வட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக குறைந்த கால கடன் வழங்கல் மற்றும் பெறுதல் மீதான வட்டி விகிதங்களை இந்திய மைய வங்கி உயர்த்தியிருப்பதன் காரணமாக வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும். குறைந்த கால கடன் வழங்கல் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமும், குறைந்த கால கடன் பெறுதல் மீதான வட்டி விகிதத்தை 0.5 விழுக்காடும் மைய வங்கி உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த உயர்வால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்னகளின் மீது வணிக வங்கிகள் வசூலித்துவரும் வட்டி விகதமும் அதிகரிக்கும்.
Subscribe to:
Comments (Atom)