Thursday, September 9, 2010

ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு கிலோ மல்லிகை 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஸ்ரீவில்லிப்புத்தூர், ரெட்டியப்பட்டி, மல்லி, வலையப்பட்டி, பாறைப்பட்டி உட்பட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை மல்லிகை கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. திருவோணம் பண்டிகையொட்டி நேற்று கிலோ மல்லிகைப்பூ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயி நாகராஜன் கூறியதாவது: கடந்த மாதத்தை விட மல்லிகை பூவிற்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. திருவோணம், திருமணம் நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த விலையேற்றம் இந்த மாதம் முழுவதும் இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

No comments:

Post a Comment