இந்திய நிறுவனங்களிலும், இந்தியாவில் தொடங்கப்படும் தொழில்களிலும் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு விவரங்கள் மாதா மாதம் வெளியிடப்படுவதைப் போல், இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் செய்யும் நேரடி முதலீடுகள் தொடர்பான விவரங்களை மாதா மாதம் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மட்டுமே இது தொடர்பான விவரங்களை வைத்துள்ளது. எனவே அதனிடம் இருந்து பெற்று அந்த விவரங்கள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அந்நிய நேரடி முதலீடுகளைக் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு இந்திய மைய வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. இத்துறையே ஒவ்வொரு மாதமும் அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment