ஆட்டோமோடிவ் பேட்டரி தயாரிப்பில் தேசிய அளவில் முடிசூடா மன்னனாக விளங்கும் அமரராஜா நிறுவனம், வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்தவும், நிறுவனத்தின் வருவாயை 2 பில்லியன் அமெரி்க்க டாலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமரராஜா நிறுவன மனி்தவள மேம்பாடு பிரிவின் துணை தலைவர் ஜெய்கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனத்தின் தற்போதைய அளவில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், நிறுவனத்தின வருவாய் ரூ. 2 ஆயிரம் கோடியாக உள்ளதாகவும், தற்போதைய அளவில், தேசிய அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள தங்கள் நிறுவனம், 2025ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் பார்சூன்500 (அதாவது தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில்) இடம்பெற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், நிறுவனத்தில் 55 முதல் 60 சதவீதம் வரை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், வளர்ச்சி சாத்தியப்படவேண்டுமென்றால், அதற்கு அதிகப்படியான ஊழியர்கள் தேவை என்றும், அதற்காகவே, வரும் 5 ஆண்டுகளுக்குள், புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும், நிறுவனத்தின் நிகர வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்( இந்திய மதிப்பில் ரூ. 9,300 கோடி) ஈட்ட திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment