Thursday, September 9, 2010

இனி கிரெடிட் கார்டும் அடையாள சான்றாகும்

ரயிலில் 'இடிக்கெட்' வைத்துக் கொண்டு பயணம் செய்யும் பயணிகள் அடையாளச் சான்றாக இனி வங்கி 'கிரெடிட் கார்ட்டை'யும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே இணையதளம் மூலம் 'இடிக்கெட்' முன்பதிவு செய்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், அடையாளச் சான்றாக, 'வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகளின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்களின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகளை ரயில் பயணத்தின் போது அடையாளச் சான்றாகக் காட்டலாம். இனி 'இடிக்கெட்' வைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், போட்டோ ஒட்டிய லேமினேஷன் செய்யப்பட்ட வங்கி 'கிரெடிட் கார்டை'யும் அடையாளச் சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment