Thursday, September 9, 2010

வர்த்தகம் சரிவில் தொடங்கி ஏற்றத்தில் முடிவு



Wednesday, 08 September 2010 13:42 யுவா

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று சரிவுடன் துவங்கிய வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. காலை 09.05 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 71 புள்ளிகள் குறைந்து 18574.40 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 22 புள்ளிகள் குறைந்து 5583.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் துவங்கியது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 92 புள்ளிகள் உயர்ந்து 18666.71 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25 புள்ளிகள் உயர்ந்து 5607.85 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிவடைந்தது.

No comments:

Post a Comment