Thursday, September 9, 2010

ஏ.டி.எம் சேவையில் மக்கள் அதிருப்தி

நாட்டில் உள்ள ஏ.டி.எம்.,களில் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) 41 சதவீதம் பழுதடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து 'செபி'யின் முன்னாள் தலைவர் தாமோதரன் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வரும் நுõற்றுக்கணக்கான புகார்களில் 41 சதவீதம் ஏ.டி.எம்., மையங்களைப் பற்றியதாக உள்ளது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கணக்கு காட்டும் ஏ.டி.எம்., பணப்பரிவர்த்தனை, பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் தெரிவிக்கும் அவலமும் உண்டு; இது குறித்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுவதில்லை என பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசுடமையாக்கப்பட்ட 26 வங்கிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை; ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இந்நிலை மாறவேண்டும். சிறிய அளவிலான வங்கிகள் பெரிய அளவிலான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்ட நிறுவனம் உள்நாட்டு வங்கிகளில் அதற்கான பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. அதற்கு வசதியாக வெளிநாட்டு வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment