Wednesday, July 28, 2010

பங்கு வர்த்தக நிலவரம்

பங்கு சந்தையில் வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கி சரிவில் முடிந்தது.



இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 120.24 புள்ளிகள் சரிந்து 17957.37 புள்ளிகளாக இருந்தது.



நிஃப்டி 33.05 புள்ளிகள் சரிந்து 5397.55 புள்ளிகளாக இருந்தது.



இன்றைய பங்கு வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லாசன் அண்ட் டியூப்ரோ, என்டிபிசி, ஹச்யூஎல், ஐசிஐசிஐ ஆகியவற்றின் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் இன்றை பங்கு சந்தை சரிவில் முடிந்தது.

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?

'பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மிகச் சிறிய அளவில் தான் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த அத்தகைய நடவடிக்கை தேவைப்படுகிறது' என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா விளக்கம் அளித்தார்.

நேற்று லோக்சபாவில், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும், அவர்களது கட்சி உறுப்பினர்களும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது:பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வு என்பது மிகச் சிறிய அளவு தான். எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது.சில மாநிலங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை அதிகபட்சமாக 33 சதவீதமாகவும், டீசல் மீது 24.7 சதவீதமாகவும், மண்ணெண்ணெய் மீது 12.5 சதவீதமாகவும் நிர்ணயித்துள்ளன. இவ்வாறு அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.



140 அமெரிக்கா வங்கிகள் திவால்

நடப்பாண்டின் ஜுலை மாதத்தில் 23-ந் தேதி வரை, அமெரிக்காவில் மொத்தம் 17 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற ஏழு மாதங்களில் அந்நாட்டில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 103-ஆக உயர்ந்துள்ளது. ஆக, மாதத்திற்கு சராசரியாக 15 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற 2009-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகின. நடப்பு ஆண்டில், திவால் ஆகும் வங்கிகள் எண்ணிக்கை இதை விட அதிகமாகும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகரித்து வருவதால், வங்கிகளிலிருந்து கடன் வாங்கியவர்களால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், அந்நாட்டில் வங்கிகள் திவால் ஆவது தொடர்கதையாகி வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள அந்நாடு வழங்கிய சலுகைகளால், நடப்பு 2010-ஆம் ஆண்டில், அந்நாட்டின் நிதி பற்றாக்குறை 1.47 லட்சம் கோடி டாலராக மிகவும் உயர்ந்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும். அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நம் நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக உள்ளது.



வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு

வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி, புதிய வட்டி விகித கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, வணிக வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்),0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இனிமேல், புதிய ரெப்போ ரேட், 5.75 சதவீதமாக இருக்கும். இதேபோல், கடன் பெறுவதற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போரேட்), 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய வட்டி வீதம் இனிமேல் 4.5 சதவீதமாக இருக்கும்.வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் (சி.ஆர்.ஆர்.,)எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது, 6 சதவீத மாகவே தொடர்ந்து நீடிக்கும்.மேலும், 2010-11ம் நிதியாண்டின் இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 8சதவீதமாக இருக்கும் என,மதிப்பிடப்பட்டிருந்தது.புதிய வட்டி வீத கொள்கையை அறிவித்து, ரிசர்வ்வங்கி கவர்னர் சுப்பாராவ் பேசுகையில், 'கடந்த ஏப்ரலில் இருந்தே, நாட்டின்பொருளாதார நிலை மேம்பட்டு வருகிறது' என்றார்.இது குறித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்து வதற்காகவே வட்டி வீதம் உயர்த்தப் பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.