Thursday, September 9, 2010

சாயத்தொழிலுக்கு "கை' கொடுக்குமா, ஜெர்மன் தொழில்நுட்பம்!

சுத்திகரிப்பு செலவு கழுத்தை நெருக்குவதால், திருப்பூர் சுற்றுப்பகுதியில் சாயத்தொழில் திண்டாட் டத்தில் உள்ளது. இந்நிலை யில், மாநில திட்டக்குழு உறுப்பினரின் வழிகாட்டு தல்படி, ஜெர்மன் தொழில் நுட்பத்தில், இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் பகுதியில் 690 சாய ஆலைகள் இயங்கு கின்றன; தினமும் ஐந்து கோடி லிட்டர் தண்ணீர், 500 முதல் 600 டன் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, தினமும் 500 டன் எடை கொண்ட துணிகளுக்கு சாயமேற்றப் படுகிறது. சாய ஆலை களில் இருந்து வெளியேற்றப் படும் கழிவு நீர், குழாய் மூலமாக பொது சுத்தி கரிப்பு நிலையத்துக்கு எடுத்து வரப்படுகிறது.







அங்கு முதல்கட்ட சுத்திகரிப்பு மூலமாக, சாயக்கழிவு நீரில் உள்ள கலர் நீக்கப் பட்டு, சுத்தமான உப்பு நிறைந்த தண்ணீராக மாற்றப்படுகிறது. அதன்பின், ஆர்.ஓ., (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) மூல மாக, மூன்று கட்டமாக சுத்திகரிப்பு செய்யப்படு கிறது. எதிர் சவ்வூடு பரவு சுத்திகரிப்பு நடப்பதால், கழிவு நீரில் 85 சதவீத தண்ணீர், சுத்தமான தண் ணீராக பிரித்தெடுக்கப் படுகிறது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அம லாகும் வரை, ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் தண்ணீர் நீர் நிலைகளில் வெளியேற்றப் பட்டது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் நடை முறைப்படுத்தப்பட்ட பின், ஆர்.ஓ.,வில் இருந்து வெளியேற்றப்படும் 15 சதவீத கழிவு நீர், "எவாப் ரேட்டர்'முறையில் ஆவியாக்கப்படுகிறது. "எவாப்ரேட்டர்' தொழில்நுட்பத்தில் ஆவியாக்க முடியாத, 20 ஆயிரம் டி.டி.எஸ்., திறனுள்ள 10 சதவீத "ஜெல்' போன்ற உப்புக்கலவை, "கிரிஸ்டிலைசர்' மூலமாக மீண்டும் உப்பாக மாற்றப் படுகிறது. "எவாப்ரேட்டர்' கட்டு மான செலவும் அதிகம்; இயக்க செலவும் மிக அதிகம். இதனால், சாயத் தொழிலே சுருங்கியுள்ளது. "எவாப்ரேட்டர்' மூலமாக கழிவுநீரை ஆவியாக்க, "ஸ்டீம்' பயன்படுத்தப் படுகிறது. அதற்காக 3,000 டன் விறகு தேவைப் படுகிறது. ஒரு லிட்டர் உப்பு நீரை ஆவியாக்கி, உப்பை பிரித் தெடுக்க மூன்று ரூபாய் வரை செலவாகிறது. அதிக வெப்பம் ஏற்படுவதால், கொதிகலன் பகுதிகள் உதிர்ந்தும், வலுவிழந்தும் போகின்றன. இதை சரிசெய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டியதும் கட்டாயமாகிறது.









தற்போதைய நடை முறையில், ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 80 முதல் 90 ரூபாய் வரை செலவாகிறது. 1,000 லிட்டருக்கு ஆர்.ஓ., செய்ய 30 முதல் 40 ரூபாய் வரை செலவாகிறது. ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் டி.டி.எஸ்., அதிகமான ஜெல் கலவையை சுத்தி கரிப்பு செய்ய, 1,000 லிட்டருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை செலவா கிறது. உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாமல், ஒட்டுமொத்த சாயத் தொழிலும் படிப்படியாக சரிந்து வருகிறது. இத னால், ஏற்றுமதி ஆர் டருக்கு சாயமேற்றுவதில் சிக்கல் உருவாகுமென அஞ்சப்படுகிறது. இக்கட்டான இத்தகைய காலகட்டத்தில், மாநில திட்டக்குழு உறுப்பினரின் ஆலோசனைப்படி, காற்றின் துணையுடன், உப்புநீரை உலர வைத்து, உப்பை பிரித்தெடுக்கும் யுக்தி ஜெர்மன் தொழில் நுட்பத்தில் கையாளப் படுகிறது. மாநில திட்டக்குழு முழுநேர உறுப்பினர் குமாரவேலு கூறியதாவது: ஆர்.ஓ.,வில் கழிக்கப் படும் சாயக்கழிவு நீரை, 10 முதல் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகள் வழியாக கீழே விழச்செய்ய வேண் டும்.







அதற்காக, பருத்திச் செடி, கிழுவை மரங்களை பயன்படுத்தலாம். மேலிருந்து கீழாக வேக மாக விழும்போது, காற்று உள்புகுந்து, உப்புநீரில் உள்ள தண்ணீரை பிரித் தெடுத்து, ஈரக்காற்றாக மாற்றி காற்றில் கலந்து விடும். இதன்மூலமாக, 20 ஆயிரம் டி.டி.எஸ்., ஆக உள்ள உப்பின் அளவு 40 ஆயிரமாக உயர்கிறது. இதேபோல், மீண்டும் மீண்டும் செய்து, மூன்று லட்சம் டி.டி.எஸ்., வரை உயர்த்தலாம். அந்நிலையில், குளிரூட் டும்போது, கரைசலானது உப்பாக மாறுகிறது. இவ் வாறு பெறப்படும் பொட் டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோ ரைடு உப்பை உரமாக பயன் படுத்தலாம். திரவ நிலை யில் உள்ள உப்பு கரை சலையும், தாவரங்களுக்கு தேவையான அளவு தெளிக் கவும், பாய்ச்சவும் செய்யலாம். திருப்பூர், அவரப்பாளை யம் பகுதியில் உள்ள சாய ஆலை ஒன்றில், கடந்த 2003 முதல் 2007 வரை, இத்தகைய இயற்கை முறை சுத்திகரிப்பு நடைமுறை யில் இருந்தது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' கட்டாயமாக்கப் பட்ட பின், அம்முறை கைவிடப்பட்டது. இத்திட் டத்தை செயல்படுத்தினால், சாயத்தொழிலில் உற்பத்தி செலவை வெகுவாக குறைக்க முடியும். சுற்றுச்சூழல் பாது காக்கப்படுவதோடு, விவ சாயிகளுக்கு உரமும் கிடைக்கும். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆவியாதல், காற்றில் உலர்தல் மூலம் கிடைக்கப் படும் பொட்டாசியம் உர மாக பயன்படும். சல் பரும், விவசாய நிலத்துக்கு சத்துள்ள பொருளாக கிடைக்கும். திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உப்பு பயன்படுத்தப் பட்டு கழிவாக வெளி யேறியது. பல ஆண்டு களாக நிலத்தடியிலும், நீரி லும் கலந்து விளை நிலங் களை பாழ்படுத்தியுள்ளது உண்மை. சுற்றுச்சூழல், விவசாயம், தொழில் ஆகிய மூன்று நலன்களை யும் கருதி, தமிழக அரசு மாதம் 600 டன் அளவுக்கு பொட்டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோரைடு உப்பை மானிய விலையில் வழங்கி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இவ்வாறு, குமாரவேலு தெரிவித்தார். ஆய்வு செய்ய திட்டம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணனிடம் கேட்டபோது,""இயற்கை வழி சுத்திகரிப்பு குறித்து, திருப்பூர் மற்றும் ஈரோடு கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.







மாசுக்கட்டுப்பாடு வாரியமும் ஆய்வு மேற் கொள்ளும். அதிக அளவு தண்ணீரை பயன் படுத்தும் பொது சுத்திகரிப்பு நிலை யங்களுக்கு அம்முறை உகந்ததா, உப்பு பிரித் தெடுப்பது சாத்தியமாகுமா என்பது உள்ளிட்ட பல் வேறு சந்தேகங்களுக்கு நேரில் ஆய்வு செய்து விளக்கம் பெறப்படும்,'' என்றார். கடலில் கலக்குமா? சாய ஆலை உரிமையாளர்கள் மேலும் கூறுகையில், "சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து கடலில் கலப்பதற்கு கூடுதல் செலவு ஏற்படும். அத்திட்டத்துக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதம் 30 கோடி ரூபாய் வரை பராமரிப்பு செலவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "கழிவு நீர் பல இடங்களை கடந்து கடலுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், எதிர்ப்பு பலமாக இருக்கும். அத்திட்டத்துக்கு மாறாக, இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யும் வழிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னதாகவே, அதற்கான ஆய்வுகளை துவக்க வேண்டும்,' என்றார். முடிவு, தமிழக அரசு கையில்! சாய ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: சாய ஆலைகளில், கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்ற சோடியம் குளோரைடு உப்பு பயன்படுத்தப் பட்டது. ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு ஏதுவாக, தற்போது 12 ரூபாய்க்கு விற்கும் சோடியம் சல்பேட் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதால், சுத்திகரிப்பு செய்து மீண்டும் உப்பாக பிரித்தெடுக்க முடிகிறது; மீண்டும் சாயமேற்றவும் உபயோகமாகிறது. சமீபத்தில் சிலர் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், சாயத்தொழிலில் பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட் உப்பை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பிரித்தெடுக்கப்படும் உப்பை, அப்படியே விவசாயிகள் உரமாக பயன்படுத்த முடியும். உப்பு நிறுவனங்களின் ஆலோசனைப்படி மீண்டும் சாயமேற்றவும் பயன்படுத்தலாம் அல்லது உப்பை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கலாம். தற்போது, இந்தியாவில், பொட்டாசியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சல்பேட் கிடைப்பதில்லை. ஒவ்வொரு தேவைக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது. இயற்கை வழி திட்டமாக இருந்தாலும், உப்பு கொள்முதலில் சற்று செலவு அதிகமாகிறது. இருப்பினும், சுத்திகரிப்பில் செலவு குறைகிறது. தமிழக அரசு, இம்முறையை பரிசீலனை செய்து தமிழகம் முழுவதும் உள்ள சாய ஆலைகளில் அமலாக்க வேண்டும், என்றனர்.



எப்போதும் இல்லாத வகையில்...தங்கம் விர்ர்ர்

தங்கம், வெள்ளி விலை எப்போதும் இல்லாத வகையில்,புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை, ஒரு கிராம் 1,791ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை, தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்துள்ளது.தங்கமாக சந்தையில் வாங்குவதைவிட, பொருள் வணிகச் சந்தையில், அன்றைய நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.பண்டிகை சீசன் துவங்குவதையொட்டி, தங்கம் மற்றும் ஆபரண தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.ரக்ஷா பந்தன் பண்டிகைதுவங்கி, கல்யாண சீசன்,தீபாவளி வரை தங்கத்திற்குஅதிக தேவை இருப்பதால்,தொடர்ந்து விலை ஏறிக்கொண்டு வருகிறது.இந்நிலையில், நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம்மற்றும் வெள்ளி விலை அதிகரித்தது.பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும் போதெல்லாம், அதற்குமாற்று ஏற்பாடாக தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சர்வதேச நாடுகளில் பொருளாதார சீர்குலைவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து, மற்ற முதலீட்டு வாய்ப்புகளை விட, தங்கத்தின் பக்கம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறிப்பாக ஐரோப்பாவில், தற்போது நிலவும் பொருளாதார சீர்குலைவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைய வாய்ப்பு இருப்பதாகவும், யூரோவின் மதிப்பும் குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கம் வாங்க துவங்கியுள்ளனர்.கடந்த ஜூன் 21ம் தேதி லண்டனில்ஒரு அவுன்ஸ் தங்கம், 1,265 டாலராக இருந்தது. இது, அதிகபட்ச விலையாகும்.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எப்படியிருக்கிறதோ அதை வைத்தே நம் நாட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.அந்த வகையில், நேற்று காலை மும்பையில் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை,இதுவரை இல்லாத வகையில்,புதிய உச்சத்தை தொட்டது.நியூயார்க்கில், வினியோகஸ்தர்கள் பெருமளவில் தங்கத்தை வாங்கினர்; இதனால், விலைஉயர்ந்தது. இதன் காரணமாக மும்பையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை, 100 ரூபாய் அதிகரித்தது.அதே போல், வெள்ளியின் விலை, 315 ரூபாய் அதிகரித்து,இந்த ஆண்டிலேயே மிகப்பெரிய உச்சமாக ஒரு கிலோ, 32 ஆயிரத்து135 ரூபாயை தொட்டது.சென்னையில் நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும், கிராம்ஒன்றிற்கு, 12 ரூபாய் அதிகரித்து,ஒரு கிராம் தங்கம் 1,791 ரூபாயாக இருந்தது. சவரன், 14 ஆயிரத்து 328 ரூபாயாக இருந்தது. வெள்ளி ஒருகிலோ, 32 ஆயிரம் ரூபாயாக இருந்தது.



இனி மாதாமாதம் இந்திய முதலீட்டு விவரம் வெளியிடப்படும்

இந்திய நிறுவனங்களிலும், இந்தியாவில் தொடங்கப்படும் தொழில்களிலும் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு விவரங்கள் மாதா மாதம் வெளியிடப்படுவதைப் போல், இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் செய்யும் நேரடி முதலீடுகள் தொடர்பான விவரங்களை மாதா மாதம் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மட்டுமே இது தொடர்பான விவரங்களை வைத்துள்ளது. எனவே அதனிடம் இருந்து பெற்று அந்த விவரங்கள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அந்நிய நேரடி முதலீடுகளைக் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு இந்திய மைய வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. இத்துறையே ஒவ்வொரு மாதமும் அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





வர்த்தகம் சரிவில் தொடங்கி ஏற்றத்தில் முடிவு



Wednesday, 08 September 2010 13:42 யுவா

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று சரிவுடன் துவங்கிய வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. காலை 09.05 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 71 புள்ளிகள் குறைந்து 18574.40 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 22 புள்ளிகள் குறைந்து 5583.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் துவங்கியது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 92 புள்ளிகள் உயர்ந்து 18666.71 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25 புள்ளிகள் உயர்ந்து 5607.85 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிவடைந்தது.

இனி கிரெடிட் கார்டும் அடையாள சான்றாகும்

ரயிலில் 'இடிக்கெட்' வைத்துக் கொண்டு பயணம் செய்யும் பயணிகள் அடையாளச் சான்றாக இனி வங்கி 'கிரெடிட் கார்ட்டை'யும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே இணையதளம் மூலம் 'இடிக்கெட்' முன்பதிவு செய்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், அடையாளச் சான்றாக, 'வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகளின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்களின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகளை ரயில் பயணத்தின் போது அடையாளச் சான்றாகக் காட்டலாம். இனி 'இடிக்கெட்' வைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், போட்டோ ஒட்டிய லேமினேஷன் செய்யப்பட்ட வங்கி 'கிரெடிட் கார்டை'யும் அடையாளச் சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



'இன்டெக் 2010' கண்காட்சி இன்று நிறைவு

நான்கு நாட்களாக கோவையில் நடந்த 'இன்டெக் 2010' கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது; 410 கோடி ரூபாய் வர்த்தக விசாரணை நடந்துள்ளது.



கோவை கொடிசியா அரங்கில், கொடிசியா சார்பில் 12வது இன்டெக் தொழிற் கண்காட்சி,கடந்த 1ம் தேதி முதல் நடந்தது; நேற்று கண்காட்சி நிறைவு பெற்றது. இன்ஜினியரிங், வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், லேத், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்களுக்கு உதவும் நவீன ரக கருவிகள், துணைப் பொருட்கள், மென்பொருட்கள், இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் உள்நாட்டு மிஷின் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அரங்குகள் அமைத்து, தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இக்கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.





கொடிசியா சங்கத் தலைவர் கந்தசாமி கூறியதாவது: இந்த ஆண்டு 9,000 சதுர அடிப் பரப்பளவில் பிரமாண்டமான முறையில் கண்காட்சி அமைக்கப்பட்டது. 471 அரங்குகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் பெரும்பாலான மிஷின்கள் அரங்கிலேயே விற்பனையாகி விட்டன; கூடுதல் மிஷின்களுக்கு 'ஆர்டர்' கிடைத்துள்ளது. மிஷின் டூல்ஸ் தயாரிப்புக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளன. முன்பு நவீன தொழில்நுட்பங்களை அறிய பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கு கோவை தொழில் துறையினர் செல்ல வேண்டியதிருந்தது. தற்போது கோவையிலேயே அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் காட்சிக்கு வைக்கப்படுவதால், தொழில் துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தொழில் துறையினரின் ஆதரவால், இந்த ஆண்டு இன்டெக் கண்காட்சிக்கு பிரமாண்ட வெற்றி கிடைத்துள்ளது. இரண்டு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 410 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணைகள் நடந்தன. இவ்வாறு கந்தசாமி கூறினார்.



வெல்லம் விலை கிடுகிடு உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெல்லம் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரும்பு அறுவடை பணி முடிந்ததாலும், சென்ற வாரத்தில் பெய்த மழை காரணமாகவும் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்து விட்டது. வரும் 11ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெல்லம் தேவை அதிகரித்துள்ளது.கவுந்தப்பாடி, சித்தோடு பகுதியில் உள்ள வெல்லம் சந்தைக்கு வடமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிகின்றனர். வெல்லம் விலை உயர்ந்துள்ளது. சதுர்த்திக்கு பின், ஆயுத பூஜை பண்டிகையின் போது, வெல்லத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். தற்போது வெல்லத்தின் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்துள்ளது.



கவுந்தப்பாடி, சித்தோடு மார்க்கெட்டில் இரு வாரங்களுக்கு முன் நாட்டு சர்க்கரை திடம் 60 கிலோ 1,560 ரூபாய், மீடியம் 1,400, மட்டம் 1,300, உருண்டை வெல்லம் 30 கிலோ 750 முதல் 800 ரூபாய், அச்சு வெல்லம் 840 முதல் 910 ரூபாயாக விற்பனையானது. வெல்லம் தேவை அதிகரித்ததால் தற்போது உருண்டை வெல்லம் 30 கிலோ மூட்டை 740 முதல் 850 ரூபாய், நாட்டு சர்க்கரை பவுடர் 1,080 ரூபாய், திடம் 1,620 ரூபாய், மட்டம் 1,350 ரூபாய், அச்சு வெல்லம் 840 முதல் 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெல்லம் வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கரும்பு அறுவடை சீஸன் முடிந்து விட்டதால் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. மழை பெய்த காரணத்தால் வெல்லம் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை பண்டிகை நெருங்குவதால் வெல்லம் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் சித்தோடு, கவுந்தப்பாடி சந்தைக்கு வரத் துவங்கியுள்ளனர். வெல்லம் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளதால், உற்பத்தியும் சூடுபிடித்துள்ளது. ஆயுத பூஜை வரை வெல்லம் விலை குறையாது. வெல்லம் தேவை அதிகரித்துக்கும் பட்சத்தில் வெல்லம் விலை கிலோவுக்கு மேலும் ஒரு ரூபாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாடிக்கையாளர் சேவையில் ரிலையன்ஸ் தொடர்ந்து முதலிடம்

வாடிக்கையாளர்களுக்கு திருப்தி தரும் வகையில் விலை நிர்ணயம் செய்வதில் அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் லைப் நிறுவனம் தொடர்ந்து 3வது ஆண்டாக முன்னணியில் உள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையிலான திட்டங்களை அறிமுகம் செய்வதில் ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி 3 வது ஆண்டாக முன்னணியில் இருப்பதாக நீல்சன் பேன் இந்தியா சார்பில் வாடிக்கையாளர் திருப்தி தொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. நீன்சன் ஆண்டுதோறும் நடத்தும் சர்வேலைக் கொண்டு தங்களின் தரத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்ததே இந்த வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் என ரிலையன்ஸ் லைப் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மலய் கோஷ் தெரிவித்துள்ளார். மொத்தம் 822 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு 1806 வாடிக்கையாளர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

பிளாக்பெரி மொபைல் சேவை தொடருமா

பிளாக்பெரி நிறுவனம் தமது மொபைல் சேவையை கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செய்து கொடுக்காவிட்டால், அதன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் பிளாக்பெரிக்கு அனுமதி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுத்துள்ளன. இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெரி மொபைலில் இல்லை. இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இதையடுத்து, பிளாக்பெரி நிறுவன சேவைகளையும் தனது கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கண்காணிப்பு தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், பிளாக்பெரி மொபைல் சேவைகளை தடை செய்யப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வட்டியில் கடன் கொடுக்க‌ வ‌ங்கிக‌ளுக்கு ஆலோச‌னை

கடன் உதவி தரும் தனியார்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்ற பெயரில் வங்கிகளுடன் இணைந்து பணப்பரிவர்த்தனை புரிய அங்கீகாரம் தரலாம் என்று முன்னாள், "செபி' தலைவர் தாமோதரன் கூறினார். வங்கிகள் எல்லாருக்கும் கடன் தர முடியவில்லை. ஆனால், அவ்வப்போது கேட்டதும் பணம் தரக்கூடிய, "வட்டிக்கு பணம் தருபவர்கள்' அதிக வட்டி வசூலித்தாலும் பணம் தருகின்றனர். கிராமப்புறங்களில் இவர்கள் முக்கியமாக பணியாற்றுகின்றனர். கிராமப்புறங்களில் குறைந்த அளவு அவசரத்திற்கு கடன் பெறுபவர்கள் இரண்டு வட்டிக்கும் குறையாமல் தந்து பணம் பெறுகின்றனர். இவர்கள் வசதியாக கடன் பெற லைசென்சுடன், "வட்டிக்கு பணம் தருபவர்கள்' என்று தொழில் நடத்துபவர்களை வங்கிகளின் "வர்த்தக தொடர்பாளர்களாக ' ( பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்) நியமிக்கலாம் என்று முன்னாள், "செபி' அமைப்பின் தலைவர் தாமோதரன் யோசனை கூறினார். அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கித் தகவலின் படி நாட்டில் உள்ள மொத்த மக்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே வங்கிக்கணக்கு வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது அதிக வங்கிக் கிளைகள் மட்டும் திறப்பதால் மிகவும் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு கடன் வசதி கிடைக்க வழியில்லை. அதே சமயம் கிராமங்களில் சிறு சிறு அமைப்புகளிடம் வாங்கும் கடன் உதவிக்கு 27 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இப்படி பணம் தருபவர்களை மக்கள் நம்பித்தான் வாழவேண்டும். மாறாக வங்கிகள் சேவை சிறக்கவும், இம்மாதிரி லைசென்சுடன் பணம் தருபவர்களை, "பிசினஸ் கரெஸ்பாண்டன்ட்ஸ்' என்று நியமிக்கலாம். இவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு டிபாசிட் சேகரிப்பது, பரஸ்பர முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துதல், மற்றும் சிறிய அளவிலான கடன் தருவது ஆகியவற்றில் ஈடுபடலாம். இதன் மூலம் வட்டி அளவு குறையும். இது வங்கி நடைமுறைகள் கடைசி மட்டத்தில் உள்ள மக்களுக்கு அடையவும் உதவிடும். வங்கி நடைமுறைகள் சிறக்க உதவும். இவ்வாறு தாமோதரன் கூறினார்.

அமரராஜா குழுமமத்தில் புதிதாக 3 ஆயிரம் பேர் நியமனம்

ஆட்டோமோடிவ் பேட்டரி தயாரிப்பில் தேசிய அளவில் முடிசூடா மன்னனாக விளங்கும் அமரராஜா நிறுவனம், வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்தவும், நிறுவனத்தின் வருவாயை 2 பில்லியன் அமெரி்க்க டாலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமரராஜா நிறுவன மனி்தவள மேம்பாடு பிரிவின் துணை தலைவர் ஜெய்கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனத்தின் தற்போதைய அளவில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், நிறுவனத்தின வருவாய் ரூ. 2 ஆயிரம் ‌கோடியாக உள்ளதாகவும், தற்போதைய அளவில், தேசிய அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள தங்கள் நிறுவனம், 2025ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் பார்சூன்500 (அதாவது தலைசிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலில்) இடம்பெற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், நிறுவனத்தில் 55 முதல் 60 சதவீதம் வரை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், வளர்ச்சி சாத்தியப்படவேண்டுமென்றால், அதற்கு அதிகப்படியான ஊழியர்கள் தேவை என்றும், அதற்காகவே, வரும் 5 ஆண்டுகளுக்குள், புதிதாக 3 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும், நிறுவனத்தின் நிகர வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்( இந்திய மதிப்பில் ரூ. 9,300 கோடி) ஈட்ட திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDFC லைப் இன்சூரன்ஸ் பிரிமிய வருவாய் உய‌ர்வு

இந்தியாவின் முன்னணி தனியார் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எச்.டீ.எஃப்.சி. ஸ்டாண்டர்டு லைஃப் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு 2010-11-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், புதிய பிரிமிய வருவாயாக ரூ.692.70 கோடியை திரட்டி உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் திரட்டப்பட்ட தொகையை விட 63 சதவீதம் (ரூ.424.90 கோடி) அதிகம் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் சவுத்ரி தெரிவித்தார். ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் தனியார் துறையில் இந்நிறுவனம் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 7.4 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிறுவனம் அதன் செலவினங்களை குறைத்ததையடுத்து, வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற காலாண்டில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிகம் ரூ.1,478.90 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டை விட 47.8 சதவீதம் (ரூ.1,000.50 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட பிரிமிய வருவாய் 38.3 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.548.80 கோடியிலிருந்து ரூ.758.90 கோடியாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் - ஜுன் காலாண்டு நிலவரப்படி, இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 116 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.22,298 கோடியாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2009-ஆம் ஆண்டின் இதே காலாண்டு இறுதியில் ரூ.10,307 கோடியாக இருந்தது என சவுத்ரி மேலும் தெரிவித்தார்.



ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு கிலோ மல்லிகை 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஸ்ரீவில்லிப்புத்தூர், ரெட்டியப்பட்டி, மல்லி, வலையப்பட்டி, பாறைப்பட்டி உட்பட கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை மல்லிகை கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. திருவோணம் பண்டிகையொட்டி நேற்று கிலோ மல்லிகைப்பூ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயி நாகராஜன் கூறியதாவது: கடந்த மாதத்தை விட மல்லிகை பூவிற்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது. திருவோணம், திருமணம் நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த விலையேற்றம் இந்த மாதம் முழுவதும் இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

'விஸ்கி' போட்டால் கார் ஓடுமா

இனி காருக்கு(ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும். அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும். ஆம். விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருட்கள், வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எடின்பெர்க்கில் உள்ளது நேப்பியர் பல்கலைக்கழகம். தாவர எரிபொருள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞானி மார்ட்டின் டாங்னி தலைமையிலான குழுவினர், விஸ்கியை ஆராய்ந்தனர். அதில் உள்ள செம்பு தாதுவில் இருந்து திரவ வடிவில் எடுக்கப்பட்ட ‘பாட் ஆல்’, தானியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ‘ட்ராப்’ ஆகிய 2 மூலப்பொருட்கள் மாற்று எரிபொருளாக பயன்படும் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பூட்டனால் என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு சர்வதேச காப்புரிமையும் பெற்றுள்ளனர். விரைவில் அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதுபற்றி மார்ட்டின் டாங்னி கூறியதாவது: இந்த பயோ-ச்ட்ணீ;ப்யூயலை பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 5 10 சதவீதம் கலந்தாலே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலை பெருமளவு மிச்சம் செய்ய முடியும். சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும். விஸ்கி தயாரிப்பில் பயன்படும் 2 மூலப்பொருட்கள் மட்டுமே இவை என்பதால் செலவும் குறைவாகவே இருக்கும் என்றார்.



ஏ.டி.எம் சேவையில் மக்கள் அதிருப்தி

நாட்டில் உள்ள ஏ.டி.எம்.,களில் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) 41 சதவீதம் பழுதடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து 'செபி'யின் முன்னாள் தலைவர் தாமோதரன் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வரும் நுõற்றுக்கணக்கான புகார்களில் 41 சதவீதம் ஏ.டி.எம்., மையங்களைப் பற்றியதாக உள்ளது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கணக்கு காட்டும் ஏ.டி.எம்., பணப்பரிவர்த்தனை, பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் தெரிவிக்கும் அவலமும் உண்டு; இது குறித்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படுவதில்லை என பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசுடமையாக்கப்பட்ட 26 வங்கிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை; ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கும் சூழல் அதிகரித்துள்ளது. இந்நிலை மாறவேண்டும். சிறிய அளவிலான வங்கிகள் பெரிய அளவிலான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்ட நிறுவனம் உள்நாட்டு வங்கிகளில் அதற்கான பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. அதற்கு வசதியாக வெளிநாட்டு வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றார்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவு

நடப்பு ஆண்டு ஜுலை மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, முந்தைய ஜுன் மாதத்தைக் காட்டிலும் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக இது சரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூ3ஜி' செல்போன் அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலத்தைப் பெற நிறுவனங்கள் சென்ற ஜுன் மாதத்தில் வங்கிகளிடமிருந்து அதிக அளவில் கடன்களை பெற்றன. மேலும், முன்கூட்டிய வரியைச் செலுத்துவதற்கு வங்கிகளுக்கு அதிக நிதி தேவைப்பட்டது. இதுபோன்ற காரணங்களால், வங்கிகள் அம்மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து அதிக தொகையை விலக்கி கொண்டன. இதனையடுத்து, சென்ற ஜுன் மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 16 சதவீதம் (ரூ.1.27 லட்சம் கோடி) சரிவடைந்து ரூ.6,75,858 கோடியாக குறைந்தது. இது, ஜுலை மாதத்தில் ரூ.10,291 கோடி குறைந்து ரூ.6,65,567 கோடியாக சரிவடைந்துள்ளது. பல பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சரிவடைந்துள்ள நிலையில், அனில் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் மிஹீச்சுவல் ஃபண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 0.85 சதவீதம் அல்லது ரூ.859 கோடி அதிகரித்து ரூ.1,02,179 கோடியாக உயர்ந்துள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அடிப் படையில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. முன்னணி நிறுவனங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள எச்.டீ.எஃப்.சி. எம்.எஃப்., ஐ.சி.ஐ.சி.ஐ. எம்.எஃப். ஆகியவற்றின் சொத்து மதிப்பு முறையே 2.33 சதவீதம் 6.88 சதவீதம் சரிவடைந்து ரூ.84,628.20 கோடி மற்றும் ரூ.68,715.11 கோடி யாக சரிவடைந்துள்ளது. ஹீ.டி.ஐ. பரஸ்பர நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,238 கோடி குறைந்து ரூ.62,207.57 கோடியாக சரிவடைந்துள்ளது. பிர்லா சன்லைஃப் பரஸ்பர நிதி நிறுவனத்தின் சொத்து மதிப்பில் 2.50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டக் மகிந்திரா எம்.எஃப். மற்றும் எல்-டி எம்.எஃப். ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் முறையே ரூ.1,051 கோடி மற்றும் ரூ.307 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஆக, சென்ற ஜுலை மாதத்தில் 39 பரஸ்பர நிதி நிறுவனங்களில் 19 நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.