Saturday, July 17, 2010

டில்லி்யில் மட்டும் மதிப்புக்கூட்டு வரி குறைவு

டில்லி மக்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று குறைந்த விலையில் டீசல் வாங்கி வருவதைத் தடுக்க டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 7.5 சதவிகிதம் குறைத்துள்ளது டெல்லி அரசு. டீசல் மீது இதுவரை 20 விழுக்காடாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 12.5 விழுக்காடாகக் குறைத்துள்ளது டெல்லி அரசு. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.70 குறைந்து ரூ.37.50 ஆகியுள்ளது. டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சி்த் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் டீசல் விலை அதிகமாக இருந்தத்தால் பக்கத்து மாநிலங்களான ஹிரியானாவிற்கும், உத்தரப் பிரதேசத்திற்கும் சென்று மக்கள் டீசல் வாங்கி வருகின்றனர். இந்த நிலையை தடுக்கவே டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டதாக ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். இந்த விலைகுறைப்பு இம்மாதம் 20ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment