இந்திய ரூபாயின் பணவீக்கம் 10.55 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், தென்மேற்குப் பருவ சாகுபடி முடிந்தபின், இந்த ஆண்டின் இறுதியில், 5 முதல் 6 சதவீதமாக குறையும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியுள்ளார். “இப்போது 10.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. தென் மேற்கு பருவ மழையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சாகுபடி முடிந்தததும் அதன் விலைவாசி குறையத் தொடங்கும். அதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 5 முதல் 6 சதவீதம் ஆகக் குறையும்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment