Friday, August 6, 2010

கச்சா எண்ணெய் உற்பத்தி 7 சதவீதம் உயர வாய்ப்பு

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.60 கோடி டன்னுக்கு அதிகமாக இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது, 7 சதவீத வளர்ச்சியாக இருக்கும் என்றாலும், சென்ற நிதி ஆண்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை (3.80 கோடி டன்) விட குறைவானது. அடுத்த சில ஆண்டுகளுக்கு உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி சற்றே மந்தமடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில் உற்பத்தி 1.8 சதவீதம் குறைந்தது. சென்ற நிதி ஆண்டில் இது 0.5 சதவீதம் என்ற அளவில் மிக குறைவான வளர்ச்சி கண்டது. அவ்வாண்டில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 3.37 கோடி டன்னாக இருந்தது. இதனையடுத்து 3.80 கோடி டன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு எட்டப்படவில்லை. கெய்ரன் நிறுவனத்தின் பார்மர் எண்ணெய் வயலில் (ராஜஸ்தான்) உற்பத்தி தாமதம் ஆனதே இதற்கு முக்கிய காரணமாகும். நடப்பு நிதி ஆண்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நடவடிக்கைகளை உள்ளடக்கிய சுரங்கத் துறை 8 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment