Monday, August 16, 2010

வட்டி உயர்வு குறித்து ஸ்டேட் பாங்க் விரைவில் அறிவிப்பு

"முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யும்" என்று அந்த வங்கியின் தலைவர் ஓ.பி.பட் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட் இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வங்கியின் சொத்துக் கடன்களுக்கான கமிட்டி (அல்கோ) இன்னும் ஓரிரு நாட்களில் கூடும். வங்கியின் காலாண்டு அறிக்கை வெளிவந்துள்ள இந்நிலையில், வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஆலோசிப்போம். அனைத்து வங்கிகளும் தங்கள் வைப்பு நிதி மற்றும் முதன்மைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து விட்டன. அதனால் 0.25 சதவீதம் முதன்மைக் கடன்களுக்கான வட்டியை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்' என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் கனரா வங்கி ஆகியவை தங்கள் முதன்மைக் கடன்களுக்கான வட்டியை 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment