இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.859.16 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.685.38 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், வங்கியின் வட்டி வருவாய் ரூ.4,032.11 கோடியிலிருந்து ரூ.4,726.96 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வட்டிச் செலவினம் ரூ.2,827.41 கோடியிலிருந்து ரூ.2,868.97 கோடியாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment