தமிழகத்தில் ரேஷனில் வழங்கப்படும் கெரசின் விலை அதிரடியாக லிட்டருக்கு, மூன்று ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. லிட்டர் 11.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு, ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் கெரசின் வழங்கப்படுகிறது. சிலிண்டர் அல்லாத குடும்ப அட்டைகளுக்கு 10 லிட்டரும், ஒரு சிலிண்டர் அட்டைகளுக்கு மூன்று லிட்டரும், விடுபட்டு, புதிதாக வழங்கப்பட்ட அட்டைகளுக்கு மூன்று லிட்டர் என கெரசின் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் ஒரு லிட்டர் 8.40 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப ஒன்பது ரூபாய் வரையும் விற்பனையானது. தற்போது கெரசின் விலை திடீரென லிட்டருக்கு மூன்று ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் 11.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, 'மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதால், கெரசின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் லிட்டர் 11.50 ரூபாயாகவும், பிற மாவட்டங்களில் தூரத்தின் தன்மைக்கேற்ப 12 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றனர்.
No comments:
Post a Comment