Thursday, July 29, 2010

குற்றாலத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி

குற்றாலத்தில் மாவட்ட மகளிர் திட்ட சுய உதவி குழுக்களின் கைவினை பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் ஜெயராமன் திறந்து வைத்தார். குற்றாலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் துவக்கி வைத்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருட்களை பார்வையிட்டார். மகளிர் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் முத்துமீனாள் முன்னிலை வகித்தார். முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் குற்றாலம் டவுன் பஞ்., தலைவர் ரேவதி, துணைத் தலைவர் ராமையா, நிர்வாக அதிகாரி ராஜையா, ஆர்டிஓ சேதுராமன், தாசில்தார் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்.,) ஆமீனாள் பீவி, செங்கோட்டை வார்டு உறுப்பினர் சுசீலா, உதவி திட்ட அலுவலர் ஆண்டனி எட்வர்ட்சிங் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கிடும் வகையில் ஆயத்த ஆடைகள், அலங்கார பொருட்கள், மூலிகை பொருட்கள், பத்தமடை பாய் வகைகள், ஊஞ்சல்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள், மூங்கில் நாற்காலிகள் போன்ற பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.

No comments:

Post a Comment