'பெட்ரோல் மற்றும் டீசல் விலை, மிகச் சிறிய அளவில் தான் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த அத்தகைய நடவடிக்கை தேவைப்படுகிறது' என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா விளக்கம் அளித்தார்.
நேற்று லோக்சபாவில், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும், அவர்களது கட்சி உறுப்பினர்களும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது:பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வு என்பது மிகச் சிறிய அளவு தான். எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது.சில மாநிலங்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை அதிகபட்சமாக 33 சதவீதமாகவும், டீசல் மீது 24.7 சதவீதமாகவும், மண்ணெண்ணெய் மீது 12.5 சதவீதமாகவும் நிர்ணயித்துள்ளன. இவ்வாறு அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
No comments:
Post a Comment