Wednesday, July 28, 2010

வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு

வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கான குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி, புதிய வட்டி விகித கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி, வணிக வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன் மீதான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்),0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இனிமேல், புதிய ரெப்போ ரேட், 5.75 சதவீதமாக இருக்கும். இதேபோல், கடன் பெறுவதற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போரேட்), 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய வட்டி வீதம் இனிமேல் 4.5 சதவீதமாக இருக்கும்.வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் (சி.ஆர்.ஆர்.,)எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது, 6 சதவீத மாகவே தொடர்ந்து நீடிக்கும்.மேலும், 2010-11ம் நிதியாண்டின் இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 8சதவீதமாக இருக்கும் என,மதிப்பிடப்பட்டிருந்தது.புதிய வட்டி வீத கொள்கையை அறிவித்து, ரிசர்வ்வங்கி கவர்னர் சுப்பாராவ் பேசுகையில், 'கடந்த ஏப்ரலில் இருந்தே, நாட்டின்பொருளாதார நிலை மேம்பட்டு வருகிறது' என்றார்.இது குறித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்து வதற்காகவே வட்டி வீதம் உயர்த்தப் பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

No comments:

Post a Comment