நடப்பாண்டின் ஜுலை மாதத்தில் 23-ந் தேதி வரை, அமெரிக்காவில் மொத்தம் 17 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற ஏழு மாதங்களில் அந்நாட்டில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 103-ஆக உயர்ந்துள்ளது. ஆக, மாதத்திற்கு சராசரியாக 15 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. சென்ற 2009-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகின. நடப்பு ஆண்டில், திவால் ஆகும் வங்கிகள் எண்ணிக்கை இதை விட அதிகமாகும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகரித்து வருவதால், வங்கிகளிலிருந்து கடன் வாங்கியவர்களால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், அந்நாட்டில் வங்கிகள் திவால் ஆவது தொடர்கதையாகி வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள அந்நாடு வழங்கிய சலுகைகளால், நடப்பு 2010-ஆம் ஆண்டில், அந்நாட்டின் நிதி பற்றாக்குறை 1.47 லட்சம் கோடி டாலராக மிகவும் உயர்ந்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும். அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நம் நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக உள்ளது.
No comments:
Post a Comment