Friday, July 30, 2010

டிஎன்பிஎல் நிறுவனத்தின் நிகரலாபம் உயர்வு

தமிழ்நாடு செய்தித்தாள்நிறுவனத்தின் லாபம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் 290.11 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்டின் வருமானம் 178.79 கோடி ரூபாய். இந்த காலாண்டில் வரிக்கு முன்லாபம் 55.18 கோடி ரூபாய்.கடந்த ஆண்டு முதல் காலாண்டின் வரிக்கு முன்லாபம் 10.88 கோடி ரூபாய்.இந்த காலாண்டில் வரிக்கு பின் லாபம் 39.87 கோடி ரூபாய். கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபம் 7.14 கோடி. எனவே,கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபத்தை விட 4.58 மடங்கு லாபம் உயர்ந்துள்ளது.இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 64 ஆயிரத்து 537 டன் காகிதம் உற்பத்தி செய்துள்ளது.நடப்பு ஆண்டில், இந்நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக, செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment