Friday, July 30, 2010

ஹூண்டாய் மோட்டார்ஸ் யுனைடெட் வங்கியுடன் கைகோர்ப்பு

இந்தியாவில் கார்களின் விற்பனையை அதிகரிக்க, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவுடன் கைகோர்க்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவன கார்களை வாங்குவதற்கான நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்கள் இந்நிறுவனமும், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனையடுத்து தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இனி யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா கார் வாங்குவற்தகாக நிதியுதவி வழங்கும், இதன்மூலம் தங்கள் நிறுவன கார்கள் இந்தியாவில் பலதரப்பு மக்களை விரைவில் சென்றடையும் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment