Thursday, September 9, 2010

சாயத்தொழிலுக்கு "கை' கொடுக்குமா, ஜெர்மன் தொழில்நுட்பம்!

சுத்திகரிப்பு செலவு கழுத்தை நெருக்குவதால், திருப்பூர் சுற்றுப்பகுதியில் சாயத்தொழில் திண்டாட் டத்தில் உள்ளது. இந்நிலை யில், மாநில திட்டக்குழு உறுப்பினரின் வழிகாட்டு தல்படி, ஜெர்மன் தொழில் நுட்பத்தில், இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் பகுதியில் 690 சாய ஆலைகள் இயங்கு கின்றன; தினமும் ஐந்து கோடி லிட்டர் தண்ணீர், 500 முதல் 600 டன் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, தினமும் 500 டன் எடை கொண்ட துணிகளுக்கு சாயமேற்றப் படுகிறது. சாய ஆலை களில் இருந்து வெளியேற்றப் படும் கழிவு நீர், குழாய் மூலமாக பொது சுத்தி கரிப்பு நிலையத்துக்கு எடுத்து வரப்படுகிறது.







அங்கு முதல்கட்ட சுத்திகரிப்பு மூலமாக, சாயக்கழிவு நீரில் உள்ள கலர் நீக்கப் பட்டு, சுத்தமான உப்பு நிறைந்த தண்ணீராக மாற்றப்படுகிறது. அதன்பின், ஆர்.ஓ., (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) மூல மாக, மூன்று கட்டமாக சுத்திகரிப்பு செய்யப்படு கிறது. எதிர் சவ்வூடு பரவு சுத்திகரிப்பு நடப்பதால், கழிவு நீரில் 85 சதவீத தண்ணீர், சுத்தமான தண் ணீராக பிரித்தெடுக்கப் படுகிறது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அம லாகும் வரை, ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் தண்ணீர் நீர் நிலைகளில் வெளியேற்றப் பட்டது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் நடை முறைப்படுத்தப்பட்ட பின், ஆர்.ஓ.,வில் இருந்து வெளியேற்றப்படும் 15 சதவீத கழிவு நீர், "எவாப் ரேட்டர்'முறையில் ஆவியாக்கப்படுகிறது. "எவாப்ரேட்டர்' தொழில்நுட்பத்தில் ஆவியாக்க முடியாத, 20 ஆயிரம் டி.டி.எஸ்., திறனுள்ள 10 சதவீத "ஜெல்' போன்ற உப்புக்கலவை, "கிரிஸ்டிலைசர்' மூலமாக மீண்டும் உப்பாக மாற்றப் படுகிறது. "எவாப்ரேட்டர்' கட்டு மான செலவும் அதிகம்; இயக்க செலவும் மிக அதிகம். இதனால், சாயத் தொழிலே சுருங்கியுள்ளது. "எவாப்ரேட்டர்' மூலமாக கழிவுநீரை ஆவியாக்க, "ஸ்டீம்' பயன்படுத்தப் படுகிறது. அதற்காக 3,000 டன் விறகு தேவைப் படுகிறது. ஒரு லிட்டர் உப்பு நீரை ஆவியாக்கி, உப்பை பிரித் தெடுக்க மூன்று ரூபாய் வரை செலவாகிறது. அதிக வெப்பம் ஏற்படுவதால், கொதிகலன் பகுதிகள் உதிர்ந்தும், வலுவிழந்தும் போகின்றன. இதை சரிசெய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டியதும் கட்டாயமாகிறது.









தற்போதைய நடை முறையில், ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 80 முதல் 90 ரூபாய் வரை செலவாகிறது. 1,000 லிட்டருக்கு ஆர்.ஓ., செய்ய 30 முதல் 40 ரூபாய் வரை செலவாகிறது. ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் டி.டி.எஸ்., அதிகமான ஜெல் கலவையை சுத்தி கரிப்பு செய்ய, 1,000 லிட்டருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை செலவா கிறது. உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாமல், ஒட்டுமொத்த சாயத் தொழிலும் படிப்படியாக சரிந்து வருகிறது. இத னால், ஏற்றுமதி ஆர் டருக்கு சாயமேற்றுவதில் சிக்கல் உருவாகுமென அஞ்சப்படுகிறது. இக்கட்டான இத்தகைய காலகட்டத்தில், மாநில திட்டக்குழு உறுப்பினரின் ஆலோசனைப்படி, காற்றின் துணையுடன், உப்புநீரை உலர வைத்து, உப்பை பிரித்தெடுக்கும் யுக்தி ஜெர்மன் தொழில் நுட்பத்தில் கையாளப் படுகிறது. மாநில திட்டக்குழு முழுநேர உறுப்பினர் குமாரவேலு கூறியதாவது: ஆர்.ஓ.,வில் கழிக்கப் படும் சாயக்கழிவு நீரை, 10 முதல் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகள் வழியாக கீழே விழச்செய்ய வேண் டும்.







அதற்காக, பருத்திச் செடி, கிழுவை மரங்களை பயன்படுத்தலாம். மேலிருந்து கீழாக வேக மாக விழும்போது, காற்று உள்புகுந்து, உப்புநீரில் உள்ள தண்ணீரை பிரித் தெடுத்து, ஈரக்காற்றாக மாற்றி காற்றில் கலந்து விடும். இதன்மூலமாக, 20 ஆயிரம் டி.டி.எஸ்., ஆக உள்ள உப்பின் அளவு 40 ஆயிரமாக உயர்கிறது. இதேபோல், மீண்டும் மீண்டும் செய்து, மூன்று லட்சம் டி.டி.எஸ்., வரை உயர்த்தலாம். அந்நிலையில், குளிரூட் டும்போது, கரைசலானது உப்பாக மாறுகிறது. இவ் வாறு பெறப்படும் பொட் டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோ ரைடு உப்பை உரமாக பயன் படுத்தலாம். திரவ நிலை யில் உள்ள உப்பு கரை சலையும், தாவரங்களுக்கு தேவையான அளவு தெளிக் கவும், பாய்ச்சவும் செய்யலாம். திருப்பூர், அவரப்பாளை யம் பகுதியில் உள்ள சாய ஆலை ஒன்றில், கடந்த 2003 முதல் 2007 வரை, இத்தகைய இயற்கை முறை சுத்திகரிப்பு நடைமுறை யில் இருந்தது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' கட்டாயமாக்கப் பட்ட பின், அம்முறை கைவிடப்பட்டது. இத்திட் டத்தை செயல்படுத்தினால், சாயத்தொழிலில் உற்பத்தி செலவை வெகுவாக குறைக்க முடியும். சுற்றுச்சூழல் பாது காக்கப்படுவதோடு, விவ சாயிகளுக்கு உரமும் கிடைக்கும். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆவியாதல், காற்றில் உலர்தல் மூலம் கிடைக்கப் படும் பொட்டாசியம் உர மாக பயன்படும். சல் பரும், விவசாய நிலத்துக்கு சத்துள்ள பொருளாக கிடைக்கும். திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உப்பு பயன்படுத்தப் பட்டு கழிவாக வெளி யேறியது. பல ஆண்டு களாக நிலத்தடியிலும், நீரி லும் கலந்து விளை நிலங் களை பாழ்படுத்தியுள்ளது உண்மை. சுற்றுச்சூழல், விவசாயம், தொழில் ஆகிய மூன்று நலன்களை யும் கருதி, தமிழக அரசு மாதம் 600 டன் அளவுக்கு பொட்டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோரைடு உப்பை மானிய விலையில் வழங்கி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இவ்வாறு, குமாரவேலு தெரிவித்தார். ஆய்வு செய்ய திட்டம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணனிடம் கேட்டபோது,""இயற்கை வழி சுத்திகரிப்பு குறித்து, திருப்பூர் மற்றும் ஈரோடு கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.







மாசுக்கட்டுப்பாடு வாரியமும் ஆய்வு மேற் கொள்ளும். அதிக அளவு தண்ணீரை பயன் படுத்தும் பொது சுத்திகரிப்பு நிலை யங்களுக்கு அம்முறை உகந்ததா, உப்பு பிரித் தெடுப்பது சாத்தியமாகுமா என்பது உள்ளிட்ட பல் வேறு சந்தேகங்களுக்கு நேரில் ஆய்வு செய்து விளக்கம் பெறப்படும்,'' என்றார். கடலில் கலக்குமா? சாய ஆலை உரிமையாளர்கள் மேலும் கூறுகையில், "சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து கடலில் கலப்பதற்கு கூடுதல் செலவு ஏற்படும். அத்திட்டத்துக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதம் 30 கோடி ரூபாய் வரை பராமரிப்பு செலவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "கழிவு நீர் பல இடங்களை கடந்து கடலுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், எதிர்ப்பு பலமாக இருக்கும். அத்திட்டத்துக்கு மாறாக, இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யும் வழிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னதாகவே, அதற்கான ஆய்வுகளை துவக்க வேண்டும்,' என்றார். முடிவு, தமிழக அரசு கையில்! சாய ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: சாய ஆலைகளில், கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்ற சோடியம் குளோரைடு உப்பு பயன்படுத்தப் பட்டது. ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு ஏதுவாக, தற்போது 12 ரூபாய்க்கு விற்கும் சோடியம் சல்பேட் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதால், சுத்திகரிப்பு செய்து மீண்டும் உப்பாக பிரித்தெடுக்க முடிகிறது; மீண்டும் சாயமேற்றவும் உபயோகமாகிறது. சமீபத்தில் சிலர் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், சாயத்தொழிலில் பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட் உப்பை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பிரித்தெடுக்கப்படும் உப்பை, அப்படியே விவசாயிகள் உரமாக பயன்படுத்த முடியும். உப்பு நிறுவனங்களின் ஆலோசனைப்படி மீண்டும் சாயமேற்றவும் பயன்படுத்தலாம் அல்லது உப்பை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கலாம். தற்போது, இந்தியாவில், பொட்டாசியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சல்பேட் கிடைப்பதில்லை. ஒவ்வொரு தேவைக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது. இயற்கை வழி திட்டமாக இருந்தாலும், உப்பு கொள்முதலில் சற்று செலவு அதிகமாகிறது. இருப்பினும், சுத்திகரிப்பில் செலவு குறைகிறது. தமிழக அரசு, இம்முறையை பரிசீலனை செய்து தமிழகம் முழுவதும் உள்ள சாய ஆலைகளில் அமலாக்க வேண்டும், என்றனர்.



எப்போதும் இல்லாத வகையில்...தங்கம் விர்ர்ர்

தங்கம், வெள்ளி விலை எப்போதும் இல்லாத வகையில்,புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை, ஒரு கிராம் 1,791ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை, தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்துள்ளது.தங்கமாக சந்தையில் வாங்குவதைவிட, பொருள் வணிகச் சந்தையில், அன்றைய நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.பண்டிகை சீசன் துவங்குவதையொட்டி, தங்கம் மற்றும் ஆபரண தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.ரக்ஷா பந்தன் பண்டிகைதுவங்கி, கல்யாண சீசன்,தீபாவளி வரை தங்கத்திற்குஅதிக தேவை இருப்பதால்,தொடர்ந்து விலை ஏறிக்கொண்டு வருகிறது.இந்நிலையில், நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம்மற்றும் வெள்ளி விலை அதிகரித்தது.பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும் போதெல்லாம், அதற்குமாற்று ஏற்பாடாக தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சர்வதேச நாடுகளில் பொருளாதார சீர்குலைவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து, மற்ற முதலீட்டு வாய்ப்புகளை விட, தங்கத்தின் பக்கம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறிப்பாக ஐரோப்பாவில், தற்போது நிலவும் பொருளாதார சீர்குலைவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைய வாய்ப்பு இருப்பதாகவும், யூரோவின் மதிப்பும் குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கம் வாங்க துவங்கியுள்ளனர்.கடந்த ஜூன் 21ம் தேதி லண்டனில்ஒரு அவுன்ஸ் தங்கம், 1,265 டாலராக இருந்தது. இது, அதிகபட்ச விலையாகும்.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எப்படியிருக்கிறதோ அதை வைத்தே நம் நாட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.அந்த வகையில், நேற்று காலை மும்பையில் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை,இதுவரை இல்லாத வகையில்,புதிய உச்சத்தை தொட்டது.நியூயார்க்கில், வினியோகஸ்தர்கள் பெருமளவில் தங்கத்தை வாங்கினர்; இதனால், விலைஉயர்ந்தது. இதன் காரணமாக மும்பையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை, 100 ரூபாய் அதிகரித்தது.அதே போல், வெள்ளியின் விலை, 315 ரூபாய் அதிகரித்து,இந்த ஆண்டிலேயே மிகப்பெரிய உச்சமாக ஒரு கிலோ, 32 ஆயிரத்து135 ரூபாயை தொட்டது.சென்னையில் நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும், கிராம்ஒன்றிற்கு, 12 ரூபாய் அதிகரித்து,ஒரு கிராம் தங்கம் 1,791 ரூபாயாக இருந்தது. சவரன், 14 ஆயிரத்து 328 ரூபாயாக இருந்தது. வெள்ளி ஒருகிலோ, 32 ஆயிரம் ரூபாயாக இருந்தது.



இனி மாதாமாதம் இந்திய முதலீட்டு விவரம் வெளியிடப்படும்

இந்திய நிறுவனங்களிலும், இந்தியாவில் தொடங்கப்படும் தொழில்களிலும் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு விவரங்கள் மாதா மாதம் வெளியிடப்படுவதைப் போல், இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் செய்யும் நேரடி முதலீடுகள் தொடர்பான விவரங்களை மாதா மாதம் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மட்டுமே இது தொடர்பான விவரங்களை வைத்துள்ளது. எனவே அதனிடம் இருந்து பெற்று அந்த விவரங்கள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அந்நிய நேரடி முதலீடுகளைக் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு இந்திய மைய வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. இத்துறையே ஒவ்வொரு மாதமும் அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





வர்த்தகம் சரிவில் தொடங்கி ஏற்றத்தில் முடிவு



Wednesday, 08 September 2010 13:42 யுவா

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று சரிவுடன் துவங்கிய வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. காலை 09.05 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 71 புள்ளிகள் குறைந்து 18574.40 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 22 புள்ளிகள் குறைந்து 5583.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் துவங்கியது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 92 புள்ளிகள் உயர்ந்து 18666.71 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25 புள்ளிகள் உயர்ந்து 5607.85 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிவடைந்தது.

இனி கிரெடிட் கார்டும் அடையாள சான்றாகும்

ரயிலில் 'இடிக்கெட்' வைத்துக் கொண்டு பயணம் செய்யும் பயணிகள் அடையாளச் சான்றாக இனி வங்கி 'கிரெடிட் கார்ட்டை'யும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே இணையதளம் மூலம் 'இடிக்கெட்' முன்பதிவு செய்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், அடையாளச் சான்றாக, 'வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகளின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்களின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகளை ரயில் பயணத்தின் போது அடையாளச் சான்றாகக் காட்டலாம். இனி 'இடிக்கெட்' வைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், போட்டோ ஒட்டிய லேமினேஷன் செய்யப்பட்ட வங்கி 'கிரெடிட் கார்டை'யும் அடையாளச் சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



'இன்டெக் 2010' கண்காட்சி இன்று நிறைவு

நான்கு நாட்களாக கோவையில் நடந்த 'இன்டெக் 2010' கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது; 410 கோடி ரூபாய் வர்த்தக விசாரணை நடந்துள்ளது.



கோவை கொடிசியா அரங்கில், கொடிசியா சார்பில் 12வது இன்டெக் தொழிற் கண்காட்சி,கடந்த 1ம் தேதி முதல் நடந்தது; நேற்று கண்காட்சி நிறைவு பெற்றது. இன்ஜினியரிங், வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், லேத், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்களுக்கு உதவும் நவீன ரக கருவிகள், துணைப் பொருட்கள், மென்பொருட்கள், இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் உள்நாட்டு மிஷின் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அரங்குகள் அமைத்து, தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இக்கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.





கொடிசியா சங்கத் தலைவர் கந்தசாமி கூறியதாவது: இந்த ஆண்டு 9,000 சதுர அடிப் பரப்பளவில் பிரமாண்டமான முறையில் கண்காட்சி அமைக்கப்பட்டது. 471 அரங்குகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் பெரும்பாலான மிஷின்கள் அரங்கிலேயே விற்பனையாகி விட்டன; கூடுதல் மிஷின்களுக்கு 'ஆர்டர்' கிடைத்துள்ளது. மிஷின் டூல்ஸ் தயாரிப்புக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளன. முன்பு நவீன தொழில்நுட்பங்களை அறிய பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கு கோவை தொழில் துறையினர் செல்ல வேண்டியதிருந்தது. தற்போது கோவையிலேயே அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் காட்சிக்கு வைக்கப்படுவதால், தொழில் துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தொழில் துறையினரின் ஆதரவால், இந்த ஆண்டு இன்டெக் கண்காட்சிக்கு பிரமாண்ட வெற்றி கிடைத்துள்ளது. இரண்டு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 410 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணைகள் நடந்தன. இவ்வாறு கந்தசாமி கூறினார்.



வெல்லம் விலை கிடுகிடு உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெல்லம் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரும்பு அறுவடை பணி முடிந்ததாலும், சென்ற வாரத்தில் பெய்த மழை காரணமாகவும் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்து விட்டது. வரும் 11ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெல்லம் தேவை அதிகரித்துள்ளது.கவுந்தப்பாடி, சித்தோடு பகுதியில் உள்ள வெல்லம் சந்தைக்கு வடமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிகின்றனர். வெல்லம் விலை உயர்ந்துள்ளது. சதுர்த்திக்கு பின், ஆயுத பூஜை பண்டிகையின் போது, வெல்லத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். தற்போது வெல்லத்தின் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்துள்ளது.



கவுந்தப்பாடி, சித்தோடு மார்க்கெட்டில் இரு வாரங்களுக்கு முன் நாட்டு சர்க்கரை திடம் 60 கிலோ 1,560 ரூபாய், மீடியம் 1,400, மட்டம் 1,300, உருண்டை வெல்லம் 30 கிலோ 750 முதல் 800 ரூபாய், அச்சு வெல்லம் 840 முதல் 910 ரூபாயாக விற்பனையானது. வெல்லம் தேவை அதிகரித்ததால் தற்போது உருண்டை வெல்லம் 30 கிலோ மூட்டை 740 முதல் 850 ரூபாய், நாட்டு சர்க்கரை பவுடர் 1,080 ரூபாய், திடம் 1,620 ரூபாய், மட்டம் 1,350 ரூபாய், அச்சு வெல்லம் 840 முதல் 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெல்லம் வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கரும்பு அறுவடை சீஸன் முடிந்து விட்டதால் வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. மழை பெய்த காரணத்தால் வெல்லம் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை பண்டிகை நெருங்குவதால் வெல்லம் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் சித்தோடு, கவுந்தப்பாடி சந்தைக்கு வரத் துவங்கியுள்ளனர். வெல்லம் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளதால், உற்பத்தியும் சூடுபிடித்துள்ளது. ஆயுத பூஜை வரை வெல்லம் விலை குறையாது. வெல்லம் தேவை அதிகரித்துக்கும் பட்சத்தில் வெல்லம் விலை கிலோவுக்கு மேலும் ஒரு ரூபாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.