சுத்திகரிப்பு செலவு கழுத்தை நெருக்குவதால், திருப்பூர் சுற்றுப்பகுதியில் சாயத்தொழில் திண்டாட் டத்தில் உள்ளது. இந்நிலை யில், மாநில திட்டக்குழு உறுப்பினரின் வழிகாட்டு தல்படி, ஜெர்மன் தொழில் நுட்பத்தில், இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் பகுதியில் 690 சாய ஆலைகள் இயங்கு கின்றன; தினமும் ஐந்து கோடி லிட்டர் தண்ணீர், 500 முதல் 600 டன் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, தினமும் 500 டன் எடை கொண்ட துணிகளுக்கு சாயமேற்றப் படுகிறது. சாய ஆலை களில் இருந்து வெளியேற்றப் படும் கழிவு நீர், குழாய் மூலமாக பொது சுத்தி கரிப்பு நிலையத்துக்கு எடுத்து வரப்படுகிறது.
அங்கு முதல்கட்ட சுத்திகரிப்பு மூலமாக, சாயக்கழிவு நீரில் உள்ள கலர் நீக்கப் பட்டு, சுத்தமான உப்பு நிறைந்த தண்ணீராக மாற்றப்படுகிறது. அதன்பின், ஆர்.ஓ., (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) மூல மாக, மூன்று கட்டமாக சுத்திகரிப்பு செய்யப்படு கிறது. எதிர் சவ்வூடு பரவு சுத்திகரிப்பு நடப்பதால், கழிவு நீரில் 85 சதவீத தண்ணீர், சுத்தமான தண் ணீராக பிரித்தெடுக்கப் படுகிறது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அம லாகும் வரை, ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் தண்ணீர் நீர் நிலைகளில் வெளியேற்றப் பட்டது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் நடை முறைப்படுத்தப்பட்ட பின், ஆர்.ஓ.,வில் இருந்து வெளியேற்றப்படும் 15 சதவீத கழிவு நீர், "எவாப் ரேட்டர்'முறையில் ஆவியாக்கப்படுகிறது. "எவாப்ரேட்டர்' தொழில்நுட்பத்தில் ஆவியாக்க முடியாத, 20 ஆயிரம் டி.டி.எஸ்., திறனுள்ள 10 சதவீத "ஜெல்' போன்ற உப்புக்கலவை, "கிரிஸ்டிலைசர்' மூலமாக மீண்டும் உப்பாக மாற்றப் படுகிறது. "எவாப்ரேட்டர்' கட்டு மான செலவும் அதிகம்; இயக்க செலவும் மிக அதிகம். இதனால், சாயத் தொழிலே சுருங்கியுள்ளது. "எவாப்ரேட்டர்' மூலமாக கழிவுநீரை ஆவியாக்க, "ஸ்டீம்' பயன்படுத்தப் படுகிறது. அதற்காக 3,000 டன் விறகு தேவைப் படுகிறது. ஒரு லிட்டர் உப்பு நீரை ஆவியாக்கி, உப்பை பிரித் தெடுக்க மூன்று ரூபாய் வரை செலவாகிறது. அதிக வெப்பம் ஏற்படுவதால், கொதிகலன் பகுதிகள் உதிர்ந்தும், வலுவிழந்தும் போகின்றன. இதை சரிசெய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டியதும் கட்டாயமாகிறது.
தற்போதைய நடை முறையில், ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 80 முதல் 90 ரூபாய் வரை செலவாகிறது. 1,000 லிட்டருக்கு ஆர்.ஓ., செய்ய 30 முதல் 40 ரூபாய் வரை செலவாகிறது. ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் டி.டி.எஸ்., அதிகமான ஜெல் கலவையை சுத்தி கரிப்பு செய்ய, 1,000 லிட்டருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை செலவா கிறது. உற்பத்தி செலவை கட்டுப்படுத்த முடியாமல், ஒட்டுமொத்த சாயத் தொழிலும் படிப்படியாக சரிந்து வருகிறது. இத னால், ஏற்றுமதி ஆர் டருக்கு சாயமேற்றுவதில் சிக்கல் உருவாகுமென அஞ்சப்படுகிறது. இக்கட்டான இத்தகைய காலகட்டத்தில், மாநில திட்டக்குழு உறுப்பினரின் ஆலோசனைப்படி, காற்றின் துணையுடன், உப்புநீரை உலர வைத்து, உப்பை பிரித்தெடுக்கும் யுக்தி ஜெர்மன் தொழில் நுட்பத்தில் கையாளப் படுகிறது. மாநில திட்டக்குழு முழுநேர உறுப்பினர் குமாரவேலு கூறியதாவது: ஆர்.ஓ.,வில் கழிக்கப் படும் சாயக்கழிவு நீரை, 10 முதல் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகள் வழியாக கீழே விழச்செய்ய வேண் டும்.
அதற்காக, பருத்திச் செடி, கிழுவை மரங்களை பயன்படுத்தலாம். மேலிருந்து கீழாக வேக மாக விழும்போது, காற்று உள்புகுந்து, உப்புநீரில் உள்ள தண்ணீரை பிரித் தெடுத்து, ஈரக்காற்றாக மாற்றி காற்றில் கலந்து விடும். இதன்மூலமாக, 20 ஆயிரம் டி.டி.எஸ்., ஆக உள்ள உப்பின் அளவு 40 ஆயிரமாக உயர்கிறது. இதேபோல், மீண்டும் மீண்டும் செய்து, மூன்று லட்சம் டி.டி.எஸ்., வரை உயர்த்தலாம். அந்நிலையில், குளிரூட் டும்போது, கரைசலானது உப்பாக மாறுகிறது. இவ் வாறு பெறப்படும் பொட் டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோ ரைடு உப்பை உரமாக பயன் படுத்தலாம். திரவ நிலை யில் உள்ள உப்பு கரை சலையும், தாவரங்களுக்கு தேவையான அளவு தெளிக் கவும், பாய்ச்சவும் செய்யலாம். திருப்பூர், அவரப்பாளை யம் பகுதியில் உள்ள சாய ஆலை ஒன்றில், கடந்த 2003 முதல் 2007 வரை, இத்தகைய இயற்கை முறை சுத்திகரிப்பு நடைமுறை யில் இருந்தது. "ஜீரோ டிஸ்சார்ஜ்' கட்டாயமாக்கப் பட்ட பின், அம்முறை கைவிடப்பட்டது. இத்திட் டத்தை செயல்படுத்தினால், சாயத்தொழிலில் உற்பத்தி செலவை வெகுவாக குறைக்க முடியும். சுற்றுச்சூழல் பாது காக்கப்படுவதோடு, விவ சாயிகளுக்கு உரமும் கிடைக்கும். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆவியாதல், காற்றில் உலர்தல் மூலம் கிடைக்கப் படும் பொட்டாசியம் உர மாக பயன்படும். சல் பரும், விவசாய நிலத்துக்கு சத்துள்ள பொருளாக கிடைக்கும். திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உப்பு பயன்படுத்தப் பட்டு கழிவாக வெளி யேறியது. பல ஆண்டு களாக நிலத்தடியிலும், நீரி லும் கலந்து விளை நிலங் களை பாழ்படுத்தியுள்ளது உண்மை. சுற்றுச்சூழல், விவசாயம், தொழில் ஆகிய மூன்று நலன்களை யும் கருதி, தமிழக அரசு மாதம் 600 டன் அளவுக்கு பொட்டாசியம் சல்பேட் அல்லது பொட்டாசியம் குளோரைடு உப்பை மானிய விலையில் வழங்கி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இவ்வாறு, குமாரவேலு தெரிவித்தார். ஆய்வு செய்ய திட்டம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணனிடம் கேட்டபோது,""இயற்கை வழி சுத்திகரிப்பு குறித்து, திருப்பூர் மற்றும் ஈரோடு கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
மாசுக்கட்டுப்பாடு வாரியமும் ஆய்வு மேற் கொள்ளும். அதிக அளவு தண்ணீரை பயன் படுத்தும் பொது சுத்திகரிப்பு நிலை யங்களுக்கு அம்முறை உகந்ததா, உப்பு பிரித் தெடுப்பது சாத்தியமாகுமா என்பது உள்ளிட்ட பல் வேறு சந்தேகங்களுக்கு நேரில் ஆய்வு செய்து விளக்கம் பெறப்படும்,'' என்றார். கடலில் கலக்குமா? சாய ஆலை உரிமையாளர்கள் மேலும் கூறுகையில், "சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து கடலில் கலப்பதற்கு கூடுதல் செலவு ஏற்படும். அத்திட்டத்துக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதம் 30 கோடி ரூபாய் வரை பராமரிப்பு செலவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "கழிவு நீர் பல இடங்களை கடந்து கடலுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், எதிர்ப்பு பலமாக இருக்கும். அத்திட்டத்துக்கு மாறாக, இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யும் வழிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னதாகவே, அதற்கான ஆய்வுகளை துவக்க வேண்டும்,' என்றார். முடிவு, தமிழக அரசு கையில்! சாய ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: சாய ஆலைகளில், கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்ற சோடியம் குளோரைடு உப்பு பயன்படுத்தப் பட்டது. ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு ஏதுவாக, தற்போது 12 ரூபாய்க்கு விற்கும் சோடியம் சல்பேட் உப்பு பயன்படுத்தப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதால், சுத்திகரிப்பு செய்து மீண்டும் உப்பாக பிரித்தெடுக்க முடிகிறது; மீண்டும் சாயமேற்றவும் உபயோகமாகிறது. சமீபத்தில் சிலர் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், சாயத்தொழிலில் பொட்டாசியம் குளோரைடு அல்லது பொட்டாசியம் சல்பேட் உப்பை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பிரித்தெடுக்கப்படும் உப்பை, அப்படியே விவசாயிகள் உரமாக பயன்படுத்த முடியும். உப்பு நிறுவனங்களின் ஆலோசனைப்படி மீண்டும் சாயமேற்றவும் பயன்படுத்தலாம் அல்லது உப்பை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கலாம். தற்போது, இந்தியாவில், பொட்டாசியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சல்பேட் கிடைப்பதில்லை. ஒவ்வொரு தேவைக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது. இயற்கை வழி திட்டமாக இருந்தாலும், உப்பு கொள்முதலில் சற்று செலவு அதிகமாகிறது. இருப்பினும், சுத்திகரிப்பில் செலவு குறைகிறது. தமிழக அரசு, இம்முறையை பரிசீலனை செய்து தமிழகம் முழுவதும் உள்ள சாய ஆலைகளில் அமலாக்க வேண்டும், என்றனர்.